Sunday, 29 December 2013

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..?





இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள்
அதிகம்..?

 

01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.



02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.



03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.



04. 1835 ல் அவரது காதலி மரணம்.



05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.



06. 1838 ல் தேர்தலில் தோல்வி.



07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.



08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.




09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.



10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.



11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.



12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில்
வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.



இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர்
வேறுயாருமில்லை...



உலகம் அறிந்த மிகவும் பிரபலமான
அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான்.



அதிக தோல்விகள், அதிக பாடங்கள்,
இவையே வெற்றியின் இரகசியம்...!!

பாலூட்டும் புறா..?




தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா (Emerald Dove) பச்சை நிற இறகுகளும் சிவப்பு நிற அலகும் கொண்ட இந்த மரகதப்புறா மட்டுமல்ல, எல்லாப் புறாக்களும் தங்கள் குஞ்சுகளைப் பாலூட்டி வளர்க்கின்றன என்பது தெரியுமா?


DoveP-feed புறாவின் பாலானது அதன் தொண்டைப் பகுதியிலுள்ள ‘crop’ எனப்படும் தொண்டைப் பையின் உட்புற சுவரின் திசுக்களில் சுரக்கிறது. இதனால் புறாப்பால் ‘crop milk’ எனவும் அழைக்கப் படுகிறது. திரவமாக இல்லாமல் பாலாடை போன்று சற்றே கெட்டியாக இருக்கும் இந்தப் பாலில் தாய்ப்பாலைவிட புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் மிக அதிகம். ஆனால் மாவுச் சத்தும் கால்சியமும் கிடையாது.


தாய்ப்புறா முட்டை இட்டதும் தாய், தந்தை என இரு புறாக்களுமே அடைகாக்கின்றன. குஞ்சுகள் வெளி வருவதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பிருந்தே புறாக்களின் தொண்டைப் பையில் பால் சுரக்க ஆரம்பித்து விடுகிறது. அப்படிச் சுரக்கும் பாலை, புறாக்கள் தொண்டைப் பையிலிருந்து எதிர்க்களிப்பு செய்து தங்கள் வாய்க்குள் கொண்டு வருகின்றன. குஞ்சுகள் தங்கள் சிறிய அலகுகளை தாய் தந்தையின் அலகுக்குள் செலுத்தி இந்தப் பாலை உட்கொள்ளுகின்றன.


குஞ்சுப் புறாக்களுக்கு முதல் இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் வரை இந்தப் பால் மட்டும்தான் உணவு. பால் சுரக்கும் தொண்டைப் பையானது சாதாரண நாட்களில் புறாக்கள் வேகமாக உட்கொள்ளும் தானியத்தைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்க உதவும் உறுப்பாகும். பால் கொடுக்கும் சமயத்தில் புறாக்கள் தானியம் உட்கொண்டால் பாலில் குஞ்சுகளால் ஜீரணிக்க முடியாத தானியம் கலக்க வாய்ப்புண்டு. அதனால் புறாக்கள் தாங்கள் பட்டினியாக இருந்து தங்களின் சிறிய குஞ்சுகளுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பாலூட்டுகின்றன. எப்பேர்ப்பட்ட தியாகம் மூன்று வாரங்களுக்குப் பிறகு ஈரப்படுத்தி மென்மைப்படுத்தப்பட்ட தானிய உணவு குஞ்சுகளுக்குக் கொடுக்கப்படுகிறது.


அதிபுத்திசாலியான புறா இனம், கண்ணாடியில் தங்கள் பிரதிபலிப்பைத் தெரிந்து கொள்ளும் (pass the mirror test) ஆற்றல் படைத்தவை மனிதர்களைத் தவிர குரங்கு, யானை, டால்ஃபின் போன்ற இன்னும் சில மிகக் குறைந்த உயிரினங்களுக்கே இந்த ஆற்றல் உண்டு. இதுபோல் இந்தப் புவியில் வாழும் தாவரங்கள், விலங்கினங்கள் என எல்லாவற்றிலும் நமக்குத் தெரியாத பல்வகை அதிசய ஆற்றல்கள் உள்ளன. இவற்றை அறியும் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். எல்லா உயிர் இனங்களையும் போற்றிப் பாதுகாக்கும் உணர்வை வளர்க்க வேண்டும். இந்தப் புவியானது, மனிதர்களாகிய நமக்கே சொந்தம் என்ற அகந்தை உணர்வு மழலைச் செல்வங்களிடம் தலைதூக்கமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.

ஒரு கடிதமும் சில கேள்விகளும்…




ஒரு கடிதமும் சில கேள்விகளும்…மகனின் வளர்ச்சியில் அக்கறை


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தன் மகனின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அவனது ஆசிரியருக்கு எழுதிய கடிதம் உலக பிரசித்தி பெற்றது.


    ஏமாற்றுவதைவிட தோற்பது எவ்வளவோ பெருமையானது என்பதை என் மகனுக்கு கற்றுத் தாருங்கள்.


    எல்லோருமே தவறு என்று கூறினாலும் தன் சொந்தக் கருத்துக்களில் நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள்.



    கண்ணீர் விடுவதில் அவமானமில்லை என்றும்,
    சிடுமூஞ்சிகளை அலட்சியப்படுத்தவும்,
 

 இனிமையாக பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு கற்றுத் தாருங்கள்.

    பொறுமையின்றி இருக்கும் துணிச்சலும், துணிவோடு இருக்கும் பொறுமையும் அவனுக்கு வேண்டும்.



    தன்னிடம் நம்பிக்கை வைப்பதை கற்றுக் கொடுங்கள். ஏனெனில் அப்போது தான் மனித சமுதாயத்தில் அவன் உன்னத நம்பிக்கை வைப்பான்.”


இது லிங்கன், கடிதத்தின் முக்கியமான பகுதி மட்டுமே.


உங்கள் குழந்தையும் எல்லா வகையிலும், எல்லா நிலையிலும் வளர்ச்சி பெற விரும்புவீர்களானால், குழந்தைகளை சரிசெய்வதைவிட- பெற்றோர்களாகிய உங்களை நீங்களே சீர்படுத்திக்கொள்வது அவசியம்.


அதற்காக இந்த கேள்விகளைப் படியுங்கள்…


* வேறு வேலையாக இருக்கும்போது உங்கள் குழந்தைகள் விளையாட அழைத்தால் செல்வீர்களா?


* குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் உடையை அணிய விடுவீர்களா?


* குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டதை உணர்ந்தால் மன்னிப்பு கேட்பீர்களா?


* இந்த டி.வி. சேனல்தான் பார்க்க வேண்டும், இவ்வளவு நேரம்தான் டி.வி. பார்க்க அனுமதி என்ற கட்டாயம் உண்டா?


* வீட்டுப்பாடத்தை குழந்தை முடிக்கவில்லையென்றால் நான் அதை செய்து கொடுக்க மாட்டேன். பள்ளியில் அதற்கான தண்டனையை பெறட்டும், அப்படியென்றால்தான் அடுத்த முறை தவறு நடக்காது என்று விட்டுவிடுவீர்களா?


* ஒழுக்கமாக வளர வேண்டும் என்பதற்காக, நான் குழந்தையை கண்டிக்கிறேன் என்கிறீர்களா?


* குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுக்க மாட்டேன். அடம்பிடிக்கும்போது அன்பாய் நடந்து கொள்ள என்னால் முடியவில்லை?


* ஆசிரியர் உள்பட மற்றவர் மீது குழந்தை புகார் கூறினால் அதில் கவனம் எடுத்துக் கொள்கிறேன்?


* குழந்தை வளர்ந்ததும் அவன் தேர்ந்தெடுக்க விரும்பும் பாடத்தை சொல்கிறான். ஆனால் அது அவனுக்கு சரிப்படாது என்றோ, தேவையில்லை என்றோ கருதுகிறேன். இருந்தாலும் அவன் இஷ்டப்படி படிக்க வைப்பேன்?


இந்த கேள்விகளில் குறைந்தபட்சம் 7 கேள்விகளுக்காவது `ஆம்’ என்ற பதில் வந்திருந்தால் நீங்கள் நல்ல பெற்றோர். இல்லாவிட்டால் உங்களையே நீங்கள் ஆத்ம பரிசோதனை செய்து சரிசெய்துகொள்ளவேண்டும். நல்ல பெற்றோரால்தான் குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்க முடியும்.

ஒரு நாளைக்குப் பிச்சை எடுக்கும் தொகை ரூ 10,000/-...!




இங்கல்ல, பிரிட்டனில்  நாட்டிங்ஹாம் நகரில் பிச்சையெடுப்பவர்களுக்கு ஒரு வாரத்துக்கு 700 பிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் கிடைக்கிறதாம். அது 70,550 ரூபாய்க்குச் சமம். ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் என்றால் ஆண்டுக்கு 36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

அதிக சம்பளம் கிடைப்பதாகச் சொல்லப்பட்டு பலரின் வயிற்றெரிச்சலுக்கு உள்ளாகிக் கிடக்கும் நமது ஐடி துறையினருக்குக் கூட இந்த அளவுக்குச் சம்பளம் இல்லை!

பிச்சையெடுக்கிறார்களே… பாவம்… தெருவோரத்தில் குடியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? தவறு. அங்கே வீடில்லாத பிச்சைக்காரர்கள் மிகக் குறைவு.

அவர்கள் தங்குவது உயர்தர ஹோட்டல்களில். பறப்பது டாக்ஸியில்.

“பிச்சையெடுக்கிறார்களே… பாவம்’ என்று யாராவது இரக்கப்பட்டு உணவு வாங்கிக் கொடுத்தால், நம்நாட்டைப் போல அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு அரக்கப் பரக்க அவர்கள் சாப்பிடுவதில்லை. தூக்கியெறிந்துவிடுகிறார்கள். அதுபோல எந்த குளிர்பானங்களை யார் வாங்கிக் கொடுத்தாலும் குடிப்பதில்லை. பணம் கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்கிறார்கள்.

பிரிட்டனில் “பிக் இஸ்யூ’ என்ற இதழ் ஒன்று உள்ளது.

“”நீங்கள் ஏன் பிச்சையெடுக்க வேண்டும்? எங்களுடைய இதழை விற்று நீங்கள் சம்பாதிக்கலாமே?” என்று ஒரு பிச்சைக்காரரிடம் கேட்டதற்கு, “”அதெல்லாம் எனக்குக் கட்டுப்படியாகாது. நான் பிச்சையெடுத்தால் எனக்கு ஒரு மணி நேரத்துக்கு 20 பவுண்ட் ஸ்டெர்லிங் (ரூ.2000) கிடைக்கும். உங்கள் பத்திரிகையை விற்றால் கிடைக்குமா?” என்று திருப்பிக் கேட்டாராம்.

இப்படிப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு மக்கள் இரக்கப்பட்டு பணம் கொடுக்க வேண்டாம் என்ற குரல் அங்கே எழும்பியிருக்கிறது.

“பிக் இஸ்யூ’  பவுண்டேஷனும், சில தன்னார்வ அமைப்புகளும், காவல்துறையும் சேர்ந்து இந்தப் பணக்காரப் பிச்சைக்காரர்களுக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கிறார்கள்!

“”உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். வீடற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இம்மாதிரியான பணக்காரப் பிச்சைக்காரர்களால் உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவி கிடைக்காமற் போகிறது” என்கிறார்கள்.

“”பிறருக்கு உதவ வேண்டும் என்ற இரக்க குணம் உங்களுக்கு இருக்கிறதா? உண்மையிலே தொண்டுள்ளத்துடன் செயல்படும் எவ்வளவோ தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு உதவுங்கள்” என்கிறார்கள்.

“”பிச்சைக்காரர்களுக்குப் பணம் தருவதன் மூலம் அவர்களுக்கு உதவுவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால்  உழைத்து நல்ல மனிதனாக வாழ வேண்டிய ஒருவரை தங்களுடைய இரக்க குணத்தால் கொன்றுவிடுகிறார்கள். சோம்பேறிகளும், தீயவர்களும் உருவாகக் காரணமாகிவிடுகிறார்கள்” என்று பிச்சையிடுபவர்களைச் சாடுகிறார்கள்.

பணக்காரப் பிச்சைக்காரர்களுக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் இவர்கள், உண்மையிலேயே  தெருவோரத்தில்  வாழ்பவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் ...?




அலுவலகம் செல்லும் ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள
வேண்டும் ...


1. ஆண்கள் போட்ற ட்ரெஸ், பக்கத்துல இருக்குற பெண்களின் கண்ண உறுத்தும்,


2. ஆண்களோட வேல பாக்குற பெண்களிடம் பெர்சனலா பேசாதீங்க


3. கூட வேல பாக்குற பெண்களிடம் ஐடியா கேட்காதீங்க


4. கூட வேல பாக்குற பெண்களிடம் செல் நம்பர் கொடுக்காதீங்க, செல் நம்பர்
வாங்காதீங்க


5. கூட வேல பாக்குற பெண்களிடம் கை கொடுத்து பேசாதீங்க


6. ஒங்க கிட்ட காசு இல்லன்னு கூட வேல பாக்குற பெண்களிடம் சொல்லாதீங்க


7. பெண்கள் காம்ப்ளிமென்ட்ஸ் கொடுக்குற அளவுக்கு ட்ரெஸ் பண்ணாதீங்க


8. ஆபீஸ் நேரத்துல ஆபீஸ் வேலைய பாருங்க, பெண்கள் வந்து பேச்சு
கொடுக்குறாங்கன்னு அவுங்ககிட்டல்லாம் பேசாதீங்க


9. ப்ரெண்ட்லியா கூட பெண்களைப்பார்த்து ஸ்மைல் பண்ணாதீங்க


10. பெண்கள் டீ குடிக்க கூப்டுவாங்க, போகாதீங்க


11. பெண்கள் லிப்ட் கேட்டா கூட்டிகிட்டு போகாதீங்க, அப்பறம் பக்கத்துல
இருக்குறவங்கல்லாம் ஒங்கள தப்பா நெனச்சிப்பாங்க


12. பெண்கள் கிட்ட எப்போதும் குசுகுசுன்னு பேசாதீங்க, எப்போதும் கைல ஒரு
சின்ன ஸ்பீக்கர் வச்சிக்கோங்க


13. குட் லக்


14. சாப்டான பாட்டா, போஸ்டானியன், ஆல்டோ ஷூவெல்லாம் போட்டுகிட்டு ஆபீஸ் போகாதீங்க, பெண்களுக்கு பிடிச்சிடும்


15. பெண்கள் ஒங்க ட்ரெஸ் பாத்து, இந்த ட்ரெஸ் நல்லா இருக்கு அப்படின்னா,
இனிமேல அந்த ட்ரெஸ் போடாதீங்க


16. வீட்ல நடக்குற கல்யாணம், காதுகுத்தி இதுக்கெல்லாம் பெண்களை கூப்டாதீங்க


17.கல்யாணம் ஆன ஆண்கள் ஒங்க மனைவியைப்பற்றி நல்ல விதமாக பேசுங்க (பேசுவீங்க, எனக்கு தெரியும்!), மற்ற பெண்கள் ஒங்ககிட்ட நெறுங்கவே மாட்டாங்க


18.ஆபீஸ்ல இருந்து அவுட்டிங் போம்போது, டூர் போம்போது, ஏன் லன்ஞ் சாப்ட
போம்போது, ஒங்க பைக், கார் இதுல எல்லாம் பெண்களை ஏத்திட்டு போகாதீங்க


19. ஆபீஸுக்கு போம்போது, தலை வாரிட்டு போக கூடாது, ஷேவ் பண்ணிட்டு போக கூடாது ...

மன்னிப்பு கேட்பது கருமத்தைக் கரைக்கும்!



கோபப்பட்டவரிடமே மன்னிப்பு கேட்பது கருமத்தைக் கரைக்கும்!


               பரம எதிரியின் வாயாலும் பாராட்டு பெற வேண்டும். அதுதான் நாம் மாறியதற்கான அடையாளம்.

துரோகியையும் அன்னை யாகக் காண்பதுதான் ஆத்ம ஞானமாகும்.

நமது ஆழ்மனதில் மறைந்துள்ள ஆன்மாவை வெளிக்கொண்டு வரவே நமக்கு துரோகம் செய்கிறார் கள். இதைப் புரிந்து கொள்வது பூரண ஞானம்.

எதிரி நம் வாழ்வைச் சிறப்பாக்கும் சிற்பி என்று உணர்ந்தால், அவர் நமக்கு எதிரியில்லை; ஆன்மிகத் தோழன்.

தன்னுடைய குறைகளை மட்டும் திருத்திக் கொள்பவருக்கு யாராலும் தொந்தரவு வராது. லட்சியத்தோடு வாழ்பவர்கள் இறைவனை சுலபமாக நெருங்கிவிட முடியும். சராசரி மனிதனாக இருக்கும் வரைதான் பிரச்சினை வரும். சமூகப் பழக்கங்களை விட்டு விலகி இறைப்பண்புகளை ஏற்றுக் கொண்டால் இன்பம் மட்டுமே உண்டு.

இழந்தது எவ்வளவு பெரியதானாலும்- எவ்வளவு நாள் கடந்ததானாலும் பிரார்த்தனை அதனைப் பெற்றுத் தரும்.

வீட்டில் சுத்தம் இருந்தால்- நல்ல பழக்கங்கள் இருந்தால் தீய சக்திகள் வரவே முடியாது.

எவரின் மனம் அவருக்கு அடங்குகிறதோ அவர் தெய்வத்தைவிட உயர்ந்தவர்.

நாள்தோறும் தண்ணீர், மின்சாரம், நேரம் விரயமாவதைத் தவிர்க்க வேண்டும். அருள் விரயமாவதன் ரகசியம் இதுவே. பேசும்போது 100 வார்த்தைகளில் 90 வார்த்தைகளைத் தவிர்க்கலாம். அளவோடும் கனிவாகவும் பேசினால் முன்னேற்றத் திற்கு வேண்டிய சக்தியைச் சேமித்து உயரலாம்.

குறைந்த பட்ச கடனாக இருந்தாலும் மறக்காமல் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். இல்லையேல் வரவேண்டிய பணம் வராது. எதிர்பார்த்த வாய்ப்புகளும் தடைப்படும்.

தேவையற்ற பொருட்களை வீட்டிலோ அலுவலகத்திலோ முடக்கி வைக்கக் கூடாது. இது வாழ்வின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். கடும் நோய்களுக்கும் கடன் தொல்லைகளுக்கும் இதுவே காரணம். அடுத்தவர் கண்ணோட்டத் தையும் சரி என ஏற்கும் மனப்பான்மை வரவேண்டும். மனம் உயர இதுவே சிறந்த வழி.

குறித்த நேரத்தில் செயல்படும் பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும். முறையாகத் திட்டமிட்டு, எந்தச் செயலையும் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுச் செய்யும் பழக்கம் வெற்றியை மட்டும் கொடுக்கும்.

பொறுத்துக்கொள்ள முடியாத இடத்தில் எல்லாம் பூரண மௌனத்தைக் கடைப்பிடித்து வெற்றி காண வேண்டும். வேண்டிய வரம் உடனே பெற இது சிறந்த முறை.

உங்கள் குரலைத் தாழ்த்தி, எதிரில் உள்ளவருக்கு மட்டும் கேட்கும் அளவுக்குப் பேசுவது உயர்ந்த குணம். தற்செயலாகக் காதில் விழுவதும், கண் முன்னால் நடப்பதும் தற்செயலானவை அல்ல. அது நம் வாழ்வில் நடக்கப் போகும் அறிகுறிகளாகும். நாம் விழிப்பாக இருந்தால் அவை நற்பலன்களாக முடியும்.

தினமும் தன்னைத்தானே சுய விமர்சனம் செய்து மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதற்குத் தியானம் உதவியாக இருக்கும். வளர்ச்சி வேண்டு மெனில் பேசும் பேச்சுக்களின் தரத்தை நாளுக்கு நாள் உயர்த்த வேண்டும். நமது நடவடிக்கைகள் யாவும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும்.

தவறு என்று தெரிந்ததும் அதைச் செய்ய மறுப்பவருக்கு வருமானத் தட்டுப்பாடு வராது. அதிர்ஷ்டம் வேண்டும் என்ற ஆர்வம் தீவிரமானால் அதிர்ஷ்டம் அரை நிமிடம்கூட காத்திருக்காது.

யார்மீது கோபம் வந்தாலும் உடனே மன்னிப்பு கேட்டுவிடுங்கள். கோபப்பட்டவரிடமே மன்னிப்பு கேட்டுவிடுவது கருமத்தைக் கரைக்க உதவும்.

AUTORUN.INF வைரசை அகற்ற எளிய வழி!





AUTORUN.INF வைரசை அகற்ற எளிய வழி!



கணினியை பயன்படுத்துவோர் பலருக்கும் AUTORUN வைரசை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும். இது பெரும்பாலும் FLASHDRIVE கள் மூலமாக பரவக்கூடியது. இது பல்வேறு வைரஸ் தாக்குதல் நமது கணினியில் நிகழ அடிப்படையானது. இதை சாதாரண முறையில் நமது கணினியில் இருந்து அழிக்க முயன்றால் முடியாது.இதை நீக்க சில PROGRAM களும் உள்ளன. இருந்தாலும் SOFTWARE எதுவும் இல்லாமல் இதை கணினியில் இருந்து நீக்கலாம்.

முதலில் உங்கள் கணினியில் NOTEPAD ஐ திறந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த CODE ஐ அப்படியே TYPE செய்து NOTEPAD ல் PASTE செய்யுங்கள். (c,d,e,f,g,h,i,k mentioned are Driver Letters. If you have more than k: you can add it)

 cd\
 c:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 d:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 e:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 f:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 g:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 h:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 i:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 j:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf
 k:
 attrib -r -s -h autorun.inf
 del autorun.inf


இந்த DOCUMENT ஐ ஏதாவது ஒரு பெயரில் .bat என்று முடியும் வகையில் சேமியுங்கள் .(உதாரணம் filename.bat) இப்போது நீங்கள் சேமித்த அந்த கோப்பை RUN செய்யுங்கள். இப்போது உங்கள் கணினியில் இருந்து autorun.inf வைரஸ் நீக்கப்பட்டிருக்கும்.

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சில ஊட்டச்சத்து குறிப்புகள்..!



வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள் வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள், இரத்த அணுக்களின் ஆரோக்கியத்திற்கும், நரம்புகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமானது. மேலும் டி.என்.ஏ உருவாக்கத்திற்கும் இது மிகவும் அவசியமானதாக விளங்குகிறது. நமது உணவில் உள்ள புரதத்தை எல்லைக்குள் வைத்து கொள்ளவும், செரிமானத்தின் போது புரதத்தை பெப்சினாக வெளியேற்றவும் பி12 உதவுகிறது. வயதான பிறகு நமது வயிற்றில் உள்ள அமிலம் குறைந்து விடும். இதனால் ஊட்டச்சத்துகளை உட்கொள்ளும் தன்மை குறைந்து விடும். அதில் பி12-ம் அடங்கும். இதனால் ஆரம்பகட்டத்திலிருந்தே பி12 அதிகம் அடங்கியுள்ள மீன், இறைச்சி போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் சைவமாக இருந்தால், இவற்றிற்கு நிகரான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.


கால்சியம் மற்றும் வைட்டமின் டி நம் உடலில் காஸ்ட்ரிக் அமிலம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால், வைட்டமின் டி மற்றும் கால்சியம் உட்கிரகிக்கும் அளவு போன்றவை முப்பது வயதிற்கு முன்பிருந்ததை விட, நாற்பது வயதில் சரிவர இருப்பதில்லை. அதனால் 30 வயதிற்குள்ளயே கால்ஷியம் அடங்கிய உணவுகளை போதிய அளவில் உட்கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றாலும் கூட காலம் தாழ்த்திவிடாமல் கீரை வகைகள், பச்சைப் பூக்கோசு, அக்ரூட், சூடை மீன், நகர மீன், பரட்டை கீரை மற்றும் கொழுப்பு குறைந்த அல்லது கொழுப்பு இல்லாத பால் போன்ற கால்சியம் அதிகமுள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


மீன் வகைகள் நமது உணவில் மீன் வகைகளை நன்றாக சேர்க்க வேண்டும். மீனில் உள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இந்த அமிலம் நமது உடலில் சுரப்பதில்லை. நகர, கிழங்கான், சூடை போன்ற கடல் மீன்கள் மற்றும் கடல் உணவுகளான நீர்ப்பாசி, இறால் போன்றவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.



பழங்கள் பழங்களில் உள்ள அதிகளவிலான சத்துக்கள் உடலுக்கு தேவையான அனைத்தையும் தருவதால் அவைகளை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலநிலையிலும் பல பழங்கள் எளிதில் நமக்கு கிடைக்கின்றன. பழங்கள் எளிய செரிமானத்திற்கு வழிவகுக்கிறது. ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பழங்கள் மிகவும் அவசியம். அவர்கள் இனிப்பு அதிகம் சேர்க்க கூடாது. ஆனால் பழங்களில் உள்ள இனிப்பு அவர்களின் சர்க்கரை அளவை பாதிப்பதில்லை.


பழச்சாறுகள் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் மிக அவசியம். அவர்களால் கடின உணவை எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு பதிலாக பழச்சாறுகளை எடுத்து கொள்ளவது மிகவும் நல்லது. நமது உடலில் உணவுகளின் எளிதான செரிமானத்திற்கும், சிறந்த நீறேற்றியாகவும் பழச்சாறு பயன்படுகிறது. மேலும் நமது உடலால் எளிதாக உட்கிரகிக்கப்படுகிறது பழச்சாறு.


முழு தானிய வகைகள் முழு தானிய உணவுகளான கோதுமையால் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் கைகுத்தல் அரிசி போன்றவை நமது உடலில் பசியை தூண்டி, சர்க்கரை அளவில் நிலைப்பாட்டை ஏற்படுத்துகிறது. நாம் அனைவரும் பாலிஷ் செய்யப்பட்ட தானியங்களை விடுத்து, முழு தானிய வகைகளை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். இவை உங்கள் பசியை சீராகி சர்க்கரையை மெதுவாக உங்கள் உடலில் சேர்க்கும். இதனால் அளவுக்கு அதிகமாக உண்ணுவதை கட்டுப்படுத்தி, சர்க்கரை அளவில் அபரிமிதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

மூளையைத் தூங்க விடாதீர்கள்...?




பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை

2. ஆர்வம், அக்கறை

3. புதிதாகச் சிந்தித்தல்


இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.


ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள்.

இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாருங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி செயல்முறைத் திட்டம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு செயல்முறைத் திட்டம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 செயல்முறைத் திட்டங்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.

மின்மினியின் காதல்....?




மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.



மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ? என்ற கேள்வி பல நாட்களாக எனக்குள் இருந்தது அதற்கான விடையை தேடி எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி
பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.


இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம்
ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.


இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.


மின்மினி பூச்சிகள் பற்றிய ஒரு பார்வை பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ‘ஹாயாக’ டார்ச் பிடித்துக் கொண்டு வளைய வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும்.


 பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும். இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும்.


பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, ஜூஸ் குடிப்பது போல உறிஞ்சிவிடும். பிறகு ஜாலியாக ரவுண்ட்ஸ் போக தொடங்கும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும்.


 ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.
மின்மினிப் பூச்சிகள் இரவுகளில் சில குறிப்பான இடங்களில் திரண்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஏன்? அங்கே ஆணும் பெண்ணும் மினுமினுக்கின்றன. தங்கள் துணை தேடுவதற்காக என்கிறார்கள் ஜார்ஜியா தென் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள்.


பெண் பூச்சிகள் மினுமினுப்பு மூலம் தங்கள் இருப்பிடத்தைக் காட்டுகின்றன. ஆண் பூச்சிகள் இதற்குத் தகுந்தாற் போல அதே வித மினுமினுப்புகளை உண்டாக்கிக் காட்டுகின்றன.
பின்னர் ஜோடி சேர்கின்றன. பெண்களில் ஒரு சிறு சதவீதம் ஆண் பூச்சிகள் மினுமினுப்புக்கு இசையாமல் அல்லது இசைய முடியாமல் இறந்துவிடுகின்றன. பரிணாம விதியில் இப்படி அழிவதும் சரிதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அழகாகக் கோபப்படுங்கள்!




பெரும்பாலும் காரணம் இல்லாமல் கோபம் வருவது இல்லை; ஆனால், மிக அரிதாகத்தான் அது நியாயமான காரணத்துக்காக வருகிறது - பெஞ்சமின் ஃபிராங்கிளின் வாரத்தை இது. ஆக, கோபம் என்பது மீண்டும் மீண்டும் ஓர் எதிர்மறை எண்ணமே என்பது தெளிவாகிறது. எண்ணங்கள் இல்லாமல் மனித மனம் கிடையாது. ஆகவே, கோபப்படுங்கள்; ஆனால், அதற்கு ஆட்படாதீர்கள். அதாவது அழகாகக் கோபப்படுங்கள்.

உளவியல் துறையில் கோபத்தை நிர்வகிக்க (Anger management) பயிற்சி அளிப்பதற்காகவே சிறப்பு வல்லுநர்கள் இருக்கிறர்கள். இவர்களிடம் பெரும் நிறுவனத்தின் உரிமையாளர்களும் உயர் அதிகாரிகளும் தங்களது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் சக நிறுவத்தினரிடம் கோபப்படாமல் நடந்துகொள்வது எப்படி? அல்லது எந்த விகிதாச்சாரங்களில் கோபப்பட வேண்டும் என்கிற பயிற்சிகளைப் பெறுகிறார்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டாம்; ஆனால், அதை வெளியேற்றும் விதங்களை, விகிதாச்சாரங்களை மாற்றி அமையுங்கள். அப்போதுதான் அக்கோபத்துக்கான பலன் கிடைக்கும். அல்லது குறைந்தபட்சம் அதனால் நேரும் எதிர்மறை விளைவுகள் தவிர்க்கப்படும். அதற்கு சில உபயோகமான யுக்திகளையும் சொல்லித்தருகிறது உளவியல்.

கோபம் ஒற்றை உணர்வு அல்ல. ஒரு கோபம் இன்னொன்றை, இன்னொன்று மற்றொன்றை என அது ஒரு சங்கிலித் தொடர்போல உருவாகிறது. அமைதியான குளத்தில் கல்லெறிவதுபோது ஏற்படும் அலைகள் போன்றது கோபம். ஒருமுறை கல் எறிவதுடன் நிறுத்திக்கொண்டால் அதுவாக அடங்கிவிடும். திரும்பத் திரும்ப கல் எறிந்தால் அடங்கவே அடங்காது. எனவே, கோபப்படும் வகையில் ஒரு நிகழ்வு நடந்த பின்பு திரும்பவும் அதையே நினைக்காதீர்கள். நினைக்க, நினைக்க கோபம் தனக்கான நியாயத்தைக் கற்பித்துக்கொண்டு பல்கிப் பெருகும்.

அப்படியும் அந்நிகழ்வை மறக்க முடியவில்லையா? உடனே கிளம்புங்கள் உல்லாசச் சுற்றுலாவுக்கு. ஆனால், இந்தச் சுற்றுலாவுக்கு பைசா செலவு கிடையாது. பஸ் பிடிக்கவும் தேவையில்லை. இது மன வெளியில் மேற்கொள்ளப்படும் பயணம் (Mental tour). உங்கள் குழந்தையின் முதல் முத்தமோ காதலியின் கன்னங்களோ உங்களின் சந்தோஷத் தருணங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.

கோபம் வருகையில் ஒரு செய்முறை. கண்ணாடி முன்பு நின்று கோபப்படுங்கள். உங்கள் முக பாவனைகளைப் பாருங்கள். ஒன்று, பயந்து பதறி விடுவீர்கள். இல்லை, அது பயங்கர காமெடியாக இருக்கும். சிரித்துவிடுவீர்கள். போயே போச்சு கோபம்!

நிகழ்வு நடந்த இடத்தில் இருந்து உடனே கிளம்பிவிடுங்கள். ஆனால், நண்பருடன் அல்ல, தனியாக. ஏனெனில் உடன் வருபவர் உங்களுக்கு வக்காலத்து வாங்கி உங்கள் கோபத்துக்கு எண்ணைய் வார்க்கலாம்.

கோபம் வருகையில் ஜோராக ஒரு நடைபயிற்சி மேற்கொள்ளலாம். தண்டால் எடுப்பது, பளு தூக்குவது போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். பிடித்தமான விளையாட்டுகளை விளையாடலாம். இதுபோன்ற சமயங்களில் கோபத்தின் காரணமாக வெளியேறும் மனச்சோர்வுக்கான ஹார்மோன்கள் குறைந்து, மகிழ்ச்சிக்கான எண்டோர்பின்கள் சுரக்கத் தொடங்கும்.

தாமதப்படுத்துங்கள். கோப உணர்வைக் காட்டத் துடிப்பதில் நீங்கள் காட்டும் ஒரு நிமிடத் தாமதம்கூட உங்கள் வாழ்வின் போக்கையே மாற்றக்கூடும். இதை நிருபிக்கப் பெரியதாக அறிவியல் ஆய்வுகள் ஏதும் தேவையில்லை. அடுத்த முறை யார் மீதேனும் உங்களுக்கு கடும் கோபம் ஏற்படுகையில் உடனடியாக அவரை மனதுக்குள் திட்டுங்கள். ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, முடிந்தால் மனவெளிப் பயணம் போய்விட்டு அவரை அழைத்துத் திட்டுங்கள். கோபம் பாதியாகக் குறைந்திருப்பதை உணர்வீர்கள்.

எதிராளியின் இடத்தில் நின்று யோசியுங்கள். சமானியர்களும் மகான்களாகும் வாய்ப்பு இது. அடிப்படை மனிதப் பண்பு, மனித நேயம் இது. ஒவ்வொரு முறையும் கோபப்படும்போது எதிராளியின் இடத்தில் நின்று சிந்திக்கும்போது ஒன்று அவரது செய்கையின் நியாயம் புரியும். நீங்களும் அதுபோல் நடந்துகொண்ட சந்தர்ப்பங்கள் நினைவுக்கு வரும். காணாமல் போகும் கோபம். அல்லது எதிராளியின் தவறு பிடிபடும். மன்னிப்பு எதிராளிக்கு மட்டுமல்ல; உங்களுக்கே அது ஓர் அருமருந்து. மன்னியுங்கள்!

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க....?




சூழ்நிலைக்கேற்ப அனுசரிக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதற்காக உங்கள் நோக்கத்தைக் கைவிட வேண்டியதில்லை.


வெளிப்படையாகப் பேசுங்கள். ஆனால் முரட்டுத்தனம் வேண்டாம்.துணிவுடன் இருங்கள். ஆனால், எதிர்ப்புணர்வைக் காட்டாதீர்கள்.

தொடர்ந்து கடுமையாக உழையுங்கள்... விட்டு விட்டு உழைப்பதில் பலனில்லை.


ஏதாவது ஒன்றில் விசேஷமான திறமை பெறுங்கள். அதற்காக உங்களை குறுக்கிக் கொண்டு தெளிவை
இழக்க வேண்டியதில்லை.


எழுத்திலும் பேச்சிலும் திறமையினை வளர்த்துக் கொள்ளுங்கள். வெறும் வார்த்தை ஜாலங்களில்
ஈடுபடாதீர்கள்.


அடிப்படைகளையும் விவரங்களையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ளுங்கள். செயலுக்குத் திட்டமிடுங்கள். அதே சமயம் விவரங்களை அலட்சியப் படுத்தாதீர்கள்.

மனித இனத்தில் நம்பிக்கை வையுங்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள். ஏமாளியாகவோ, தலை கர்வத்துடனோ இருக்காதீர்கள்.


மனதில் சித்திரம் உருவாக்கி முன்கூட்டியே திட்டமிடுங்கள். உடனடியான எதிர்காலத்தை மறந்து நீண்ட எதிர்காலத்திற்குத் திட்டமிடாதீர்கள்.


மரியாதைக் குறைவினையோ, வெறுப்பையோ வளர்த்துக் கொள்ளாதீர்கள்.வேலையை நேசியுங்கள். அதுவே முழு திருப்தியை அளிக்கும். முயற்சியை வளர்த்துக்  கொள்ளுங்கள். சிறிய குழிகள்தான் பெரிய பள்ளங்களாகின்றன. துணிவுடன், நேர்மையுடன் இருங்கள். கஷ்டங்களைக் கடக்க அது உங்களுக்கு உதவும்.

கணவ‌ரிட‌ம் ‌பிடி‌க்காத ‌விஷய‌ம்....?





கணவ‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் ‌சில பழ‌க்க வழ‌க்க‌ங்க‌ள் மனை‌வி‌க்கு‌‌ப் ‌பிடி‌க்காம‌ல் போகலா‌ம். ஆனா‌ல் பெரு‌ம்பாலான மனை‌விகளு‌க்கு‌, த‌ங்களது கணவ‌ரிட‌ம் ‌பிடி‌க்காத ‌விஷய‌ம் எ‌ன்று ஒ‌ன்று இரு‌க்குமானா‌ல் அது எதுவாக இரு‌க்கு‌ம் எ‌ன்று உ‌ங்களா‌ல் க‌ணி‌க்க முடியுமா?


தாய்க்குப் பின் தாரம் எ‌‌ன்று ஒரு பழமொ‌ழி உ‌ள்ளது. இதனை ச‌ரியாக உண‌ர்‌ந்தா‌ல் இ‌ந்த தவறு ச‌ரிசெ‌ய்ய‌ப்படு‌ம். அனைத்து பெண்களுக்குமே கணவரிடம் பிடிக்காத விஷயம் எது தெரியுமா? தன்னுடைய கணவர் அம்மா பிள்ளையாக இருக்கிறார் என்பதுதான்.


பெ‌ற்று, ‌வள‌ர்‌த்து ஆளா‌க்‌கிய தாயை ம‌தி‌ப்பதோ, அவரது சொ‌ல்படி நட‌ப்பதோ ந‌ல்ல ‌விஷய‌ம்தா‌ன். ஆனா‌ல், ‌திருமணமா‌கி த‌ன்னை ந‌ம்‌பி வ‌ந்த பெ‌ண்ணு‌க்கு‌ம் அ‌ந்த அள‌வி‌ற்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம் தர வே‌ண்டியது‌ம் அவ‌சியமா‌கிறது. பொதுவாக எதை‌ச் செ‌‌ய்தாலு‌ம் அ‌ம்மா‌வி‌ன் அனும‌தியை‌ப் பெற வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பது தவ‌றி‌ல்லை. ஆனா‌ல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன ‌விஷய‌ங்களு‌க்கு‌ம் அவரது சொ‌ல்படிதா‌ன் நட‌ப்பே‌ன் எ‌ன்று ‌நீ‌ங்‌க‌ள் ‌நினை‌த்தா‌ல் உ‌ங்களு‌க்கு சுயபு‌த்‌தி‌யி‌ல்லை எ‌ன்று மனை‌வி ‌நினை‌க்க வே‌ண்டி வரு‌ம்.


மேலு‌ம், உ‌ங்க‌ள் இருவரு‌க்கு‌ள் ‌இரு‌க்கு‌ம் ‌சில ‌சி‌ன்ன ‌சி‌ன்ன ‌விஷய‌ங்க‌ளு‌ம், தா‌ய்‌க்கு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டா‌ல், ஒரு சுத‌ந்‌திர மன‌ப்பா‌ன்மையை உ‌ங்க‌ள் மனை‌வி இழ‌க்க வே‌ண்டி வரு‌ம்.


எனவே, எது ச‌ரி, எது தவறு எ‌ன்று முடிவெடு‌த்து அதனை உ‌ங்க‌ள் தா‌யி‌ன் கவன‌த்‌தி‌ற்கு‌ம் கொ‌ண்டு வ‌ந்து ‌நீ‌ங்க‌ள் செ‌ய்வ‌தி‌ல் தவ‌றி‌ல்லை.


ச‌ரி இ‌ப்படி ஒரு ஆ‌ண், தனது தா‌யி‌ன் பே‌ச்சை‌க் கே‌ட்டு நட‌ப்பதை ‌விரு‌ம்பாத பெண், எதிர் காலத்தில் தன்னுடைய மகன் அம்மா பிள்ளையாக இருக்க வேண்டும் என்று ஆசை‌ப்படுவதையு‌ம் நா‌ம் பா‌ர்‌க்க முடி‌கிறது. பெற்றோர் மீது பாசமுள்ள கணவர்தான், மனைவி மீதும் பாசமாக இருப்பார் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


‌திருமணமானது‌ம் எ‌ல்லாமே மனை‌வியாக‌த்தா‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பது‌ம் தவறு, உ‌ங்களது அ‌‌ன்பு, அ‌க்கறை போ‌ன்றவை தா‌ன், ஒரு ஆணு‌க்கு தா‌ய் செ‌ய்ய வே‌ண்டிய கடமைக‌ளி‌ல் ‌சி‌றிது தள‌ர்வை ஏ‌ற்படு‌த்துமே‌த் த‌விர, ‌அ‌திகார‌ம் அ‌ல்ல. எ‌‌ந்த‌ப் பெ‌ண்ணு‌ம் தனது கணவரை தா‌யை ‌வி‌ட்டு‌ப் ‌பி‌ரி‌த்து கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌த்தா‌ல் முத‌லி‌ல் ‌‌நீ‌ங்க‌ள் இழ‌ப்பது உ‌ங்க‌ள் கணவ‌ரி‌ன் அ‌‌ன்பை‌த்தா‌ன். எனவே எதையு‌ம் உ‌ங்களது அ‌ன்பாலு‌ம், அ‌க்கறையாலு‌ம் ச‌ரி செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.

கணவன் வாங்கலையோ..கணவன்....?




ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..


அது என்னன்னா...!  

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.


2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும்


இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.


ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..
அப்டியே வெளிய தான் போக முடியும்.  


இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."மச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது   



முதல் தளத்துல அறிக்கை பலகைல


 "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு   



இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா



இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல



 "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு    



இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.   



மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல



"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு



அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.



நாலாவது தளத்துல அறிக்கை பலகைல




"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.



வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.
இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?



கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.



ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல

 

 "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.



வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.
அவ்ளோ தான்.....


அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..   


ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல

 

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..


இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .


எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...
பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது .

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்.....?




90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்

ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிக்கட்டி இப்போதைய வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான்.

தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் ஆராய்ச்சியில் கழித்துள்ள இவர், அங்கு நடந்து வரும் இயற்கை மாற்றங்களால் அதிர்ந்து போயுள்ளதாகக் கூறுகிறார்.

இப்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்திக்கு உலகம் மாற வேண்டியதன் அவசரமான அவசியம் குறித்து உலகெங்கும் பயணித்து பிரச்சாரம் செய்து வரும் இவர் சென்னை வந்துள்ளார். பல்வேறு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தி வரும் நிருபர்களிடம் பேசுகையில்,

நான் உண்மையில் ஐஸ் மேன் தான், எனது பெரும்பாலான நாட்களை மைனஸ் 73 டிகிரி வெப்பநிலையில் கழித்துவிட்டேன். அந்த வெப்பத்தில் நம் கண்களில் உள்ள நீர் பனிக்கட்டியாகிவிடும், பார்வை தெரியாது. பற்களில் பிளவுகள் ஏற்பட்டுவிடும். சென்னையி்ன் இந்த சூடான வெப்பநிலை எனக்கு புத்துணர்ச்சியைத் தந்துள்ளது.

அண்டார்டிகாவிலும் ஆர்ட்டிக் பகுதிகளில் பனி மலைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதை நான் கண்கூடாகவே பார்த்துள்ளேன். சென்னையில் நீங்கள் ஓட்டும் கார்கள், பைக்குகளில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைட் துருவப் பனியை உருக்குவதை நீ்ங்கள் உணர வேண்டும்.

இந்த பனி உருகலால் உலகின் கடல் மட்டம் வி்ஞ்ஞானிகள் கூறியதை விட மிக வேகமாகவே உயர்ந்து வருகிறது. கடல் மட்டம் 2 மீட்டர் உயர்ந்தால் போதும், அது உலகின் பல்வேறு பகுதிகளை நீரி்ல் மூழ்கடித்துவிடும். இது மிக வேகமாகவே நடக்கப் போகிறது என்ற அபாயத்தை உணர்த்தவே நான் பனிப் பகுதிகளை விட்டுவிட்டு உலக நாடுகளை சுற்றி வந்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளேன்.

இந்த சுற்றுச்சூழல் பேராபத்தை தவிர்க்க ஒரே வழி சூரிய மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் தான். இல்லாவிட்டால் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து நாம் தயாரிக்கும் எரிசக்தியே நம்மை அழித்துவிடும் என்கிறார்.

தனது 33 வயதிலேயே வட துருவத்தையும் தென் துருவத்தையும் முழுக்க முழுக்க நடந்தே கடந்த மனிதர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராபர்ட் சவான் 1984-ம் ஆண்டு தென்துருவத்தில் 70 நாட்கள் 900 மைல் தூரம் நடந்து சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் தனது துருவப் பகுதி ஆராய்ச்சிக்காக டாக்சி ஓட்டியும், குடோன்களில் வேலைபார்த்தும் பணம் சேர்த்துள்ளார்.

கடும் போராட்டத்துக்குப் பின் ஒரு வழியாக சில சுற்றுச்சூழல் அமைப்புகளும் கைகொடுக்கவே 1984ம் ஆண்டு சதர்ன் குவெஸ்ட் என்ற கப்பலை வாடகைக்கு எடு்த்துக் கொண்டு 3 மாதம் 15,000 மைல்கள் பயணித்து அண்டார்டிகாவை அடைந்துள்ளார். இவருடன் இரு நண்பர்களும் பயணித்தனர்.

அண்டார்டிகாவில் இந்த மூவரும் 1,400 கி.மீ. தூரம் நடந்துள்ளனர். வயர்லெஸ் உதவியோ, அவசரகால உதவியோ இல்லாமல் இவர்கள் 70 நாட்கள் நடந்துள்ளனர்.

இந்தப் பயணத்தின்போது இவர்களின் கண்களின் நிறம் மாறியுள்ளது. இதற்கான காரணத்தை அவர்கள் கண்டறிந்தபோது அதிர்ந்து போயினராம்.

இவர்களது கண்களி்ல் உள்ள நிறமிகள் நிறமிழக்கக் காரணம், அண்டார்டிகா பகுதியின் மேலே வளி மண்டலத்தில் ஓசோன் படத்தில் ஏற்பட்ட ஓட்டை வழியாக ஊடுருவிய சூரியக் கதி்ர்கள் என்று தெரியவந்ததாம்.

இந்தப் பயணத்துக்குப் பின்னர் ஆர்ட்டிக் பிரதேசத்துக்கு 8 நிபுணர்களுடன் பயணித்தார் ஸ்வான். அங்கு 56 நாட்கள் சுமார் 1,000 கி.மீ. நடந்து ஆய்வுகளை மேற்கொண்டபோது பனிக் கட்டிகள் மிக வேகமாக உருகுவதைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.

உலகின் வெப்பமயமாதலுக்கு வளர்ந்த நாடுகள் இதுவரை செய்த தவறுகளே காரணம் என்று கூறும் ஸ்வான், அதே தவறை இந்தியாவும் சீனாவும் செய்துவிடக் கூடாது. வேகமாக பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையான எரிசக்தி சூரியனிடமிருந்தும் காற்றாலைகளில் இருந்தும் வந்தால், உலகம் தப்பும் என்கிறார்.


எல்லோரும் வாழ்வோம் !
நன்றாக வாழ்வோம் !!
ஒன்றாக வாழ்வோம் !!!

உதடு ஒட்டாத குறள்(கள்) ....?




யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் -341


         ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. (திரு மு.வ உரை)

   
   
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். – 489



         கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும். (திரு மு.வ உரை)

செல்போன் சந்தேகங்களுக்கு தீர்வு தரும் செயலி..?




செல்போன் என்று வாங்கிவிட்டால் அதன் செயல்பாட்டில் அடிக்கடிசந்தேகங்களும் பிரச்சனைகளும் வரத்தான் செய்யும். அதிலும் ஸ்மார்ட் போன்கள்என்றால் கேட்கவே வேண்டாம். இது போன்ற நேரங்களில் கைகளை பிசைந்து கொண்டும்நிற்க வேண்டாம். சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு பதில் பெறமுடியாமல் அல்லாடவும் வேண்டாம்.


ஒரே ஒரு குறுஞ்செய்தியில் உங்கள் செல்போன் சார்ந்த பிரச்சனைக்கான தீர்வைஉரிய நிபுணர்களிடம் இருந்து தெரிந்து கொண்டு விடலாம் :டிவைஸ் ஹலெப் செயலிஇந்த நம்பிக்கையை தான் அளிக்கிறது. மும்பையை சேர்ந்த ஹாப்டிக் எனும்நிறுவனத்தால் உருவாகக்ப்பட்டுள்ள செயலி இது. ஆப்பிலின் ஐபோன் மற்றும்ஆண்ட்ய்ராய்டில் செயல்படக்கூடிய இந்த செயலியின் வழியே உங்கள் செல்போன்பிரச்ச்னைகளை குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கலாம். இந்த சந்தேகங்களுக்கானதீர்வுகளை தொடர்புடைய நிபுணர்கள் குறுஞ்செய்தி வழியாகவே வழங்குவார்கள்.


செல்போன்பயன்பாட்டில் கில்லாடிகளாக இருக்கும் நபர்கள் மற்றும் செல்போன்நிறுவனங்களிலேயே பணியாற்றியவர்களை சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும்நிபுணர்களாக இணைத்து கொண்டிருப்பதாக ஹாப்டிக் சொல்கிறது.


செல்போனில்நாம் அதிகம் பயன்படுத்துவது குறுஞ்செய்தி வசதியை தான். ஆனாலும் கூடசெல்போனில் ஒரு பிரச்ச்னை என்றால் யாருக்காவது போன் செய்து அல்லாடவேண்டியிருக்கிறது. இந்த நிலையை மாற்றி செல்போன் சந்தேகங்களுக்குகுறுஞ்செய்தி வடிவிலேயே எளிதான பதில் பெற உதவும் டிவைஸ் ஹெல்ப் செயலியைமுதலில் உருவாக்கியிருப்பதாக ஹாப்டிக் தனது இணையதளத்தில்குறிப்பிட்டுள்ளது. அடுத்த கட்டமாக செயலி மூலமே அனைத்து தொழில்நுட்பஉதவிகளையும் பெற வைக்கும் திட்டம் இருக்கிறதாம். டிவைஸ் ஹெல்ப் ஆர்ம்பம்தான் என்கிறது ஹாப்டிக்.

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்




தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்

 எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.


ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.

கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.

மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.

தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.


பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.

வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.


அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.


இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.

பழைய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.


மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.


சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.

பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.

உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.

ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.

துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.

நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.

தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.

ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.

நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.

மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.

பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.

நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.

தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.

மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.

பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.

மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விட்டு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.

நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.

குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.


நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.

எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

யூடியூப் வழங்கும் புதிய வசதி....? அற்புதம்!




தனிநபர் தொலைகாட்சி பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது வரை யோசிக்கவிட்டாலும் இனி யோசியுங்கள். ஏனெனில் தனிநபர் தொலைகாட்சி நடத்துவது மிகவும் சுலபமானது. அதை நீங்களும் கூட செய்யலாம். எப்படி என்று ஆர்வத்துடன் கேட்கிறீர்களா? பிரபல வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் இதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது.


இணைய உலகில் ஸ்டீரிமிங் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பட்டனை தட்டியதும் குழாயில் இருந்து தண்ணீர் பாய்வது போல ஆடியோ அல்லது விடியோ கோப்புக்கள் கிளிக் செய்ததும் ஒளிபரப்பாகத்துவங்கி விடுவதை தான் ஸ்டீரிமிங் என்கின்றனர். ஸ்டீரிமிங் செய்யப்படும் போது கோப்புகளை டவுண்லோடு செய்யத்தேவையில்லை. ஒரு நிகழ்ச்சி நடக்கும் போதே ஸ்ட்டிர்மிங் செய்யப்பட்டால் அதை நேரடியாகவே பார்த்தோ கேட்டோ ரசிக்கலாம். இதற்கு லைவ் ஸ்டீரிமிங் என்று பெயர். தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்புக்கு நிகரானது.


இப்போது யூடியூப்பிற்கு வருவோம். யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து ரசிப்பது போலவே நாமும் கூ ட அதில் சுலபமாக வீடியோக்களை பதிவேற்றலாம். விரும்பினால் யூடியூப்பில் ஒரு கணக்கு துவங்கி நமக்கான சேனலையும் அமைத்து கொள்ளலாம். இந்த சேனல் வசதியையே கூட நமக்கான தொலைக்காட்சி சேனல் என்று சொல்லலாம். பலர் வெற்றிகரமாக இப்படி யூடியூப்பில் சொந்த சேனை வைத்திருக்கின்றனர். வீடீயோ வலைப்பதிவாளர்களும் கூட இருக்கின்றனர்.


ஆனால் இந்த சேனலில் என்ன பிரச்சனை என்றால் நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்க செய்ய முடியாது. ஏற்கனவே ஒளிப்பதிவு செய்த நிகழ்ச்சிகளை வீடியோ கோப்பாக பதிவேற்றி பார்க்க செய்யலாம்.
இதற்கு மாறாக நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்க செய்ய முடிந்தால் எப்படி இருக்கும் எனும் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் யூடியூப் சில மாதங்களுக்கு முன் நேரடி ஒளிபரப்பு வசதியை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நிகழ்ச்சிகளை அவை நடக்கும் போதே யூடியூப்பில் பார்க்க செய்வது சாத்தியம். முதலில் இந்த வசதி அதிக சந்தாதாரர்களை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு குறைந்தது ஆயிரம் சந்தாதாரர்களாவது இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.


இப்போது யூடியூப்பில் சரி பார்க்கப்பட்ட கணக்கு உள்ள யாரும் இந்த வசதியை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, உங்களிடம் யூடியூப் கணக்கு இருந்தால் போதும் நீங்களும் கூட யூடியூப்பில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப துவங்கிவிடலாம். அது மட்டும் அல்ல கூகுல் ஹாங்கவுட்ஸ் சேவையையும் இதில் இணைக்க முடியும். எனவே ஹாங்கவுட்ஸ் பயன்படுத்துவர்கள் அதில் பகிர்ந்து கொள்ளும் வீடியோ தகவலை யூடியூப்பிலும் ஒருங்கிணைக்க முடியும். மேலும் இப்படி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பது போன்ற புள்ளி விவரங்களையும் யூடியூப்பே தருகின்றது.


வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இசைக்குழு போன்றவை இந்த நேரடி ஒளிபரப்பு வசதியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களோடு மேலும் துடிப்பான வழியில் தொடர்பு கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. ஏன் தனிநப்ர்களும் கூட இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
திறமையும் ஆர்வாமும் இருந்தால் நீங்களே நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பவும் செய்யலாம். அது பார்வையாளர்களை காவருமானால் உங்களுக்கான தனிநபர் தொலைகாட்சி தாயாராகிவிட்டது என பொருள். யார் கண்டது யூடியூப்பில் இத்தனை லட்சம் பேர் பார்த்த வீடியோ என்று தானே இப்போது பெசுகிறோம். இனி வரும் காலத்தில் இத்தனை லட்சம் பார்த்து ரசித்த நேரடி நிகழ்ச்சி என்று பேசப்படலாம்.

கூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை




கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது. அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு.


அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள். அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.இதன் முதலாளி லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி பன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!)


எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள்.


பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர்.


ஒன்று போட்டு நூறு சைபர்.


எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள்.


 ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

பற்றில்லாத பாஸ்வேர்டு செய்வோம்....?




இந்து மதத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் அதன் பற்றில்லாத தன்மை கொள்கை பாஸ்வேர்டு விஷயத்தில் பின்பற்றத்தக்கது. ஆய்வாளர்கள் அப்படி தான் சொல்கின்றனர். அதாவது பற்றில்லாத தன்மையுடன் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும் என்கின்றனர்.

பாஸ்வேர்டில் என்ன பற்றும் பற்றில்லா தன்மையும் என்று கேட்கலாம். இதற்கு பதில் அறியும் முன் ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு புதிய பாஸ்வேர்டு ஒன்றை உருவாக்க பாருங்கள். நீங்கள் உருவாக்கிய பாஸ்வேர்டு எதுவாக இருதாலும் , அநேகமாக அது ஏதோ ஒரு விதத்தில் உங்களை சார்ந்ததாகவே இருக்கும். ஒன்று உங்கள் பெயர் அல்லது உங்கள் பிறந்த நாள் அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களின் பெயர் … இப்படி உங்களை சார்ந்த விஷயங்கள் சார்ந்தே நீங்கள் பாஸ்வேர்டுக்கான எழுத்துக்களை தேர்வு செய்திருப்பீர்கள்.

இது இயல்பானது தான். தேர்வு செய்யப்பட்ட பாஸ்வேர்டு நினைவில் நிற்க பலரும் கையாளும் வழி இது. ஆனால் பாஸ்வேர்டு திருடர்களும் இவற்றை அறிந்திருப்பதா ல் , ஒருவரது தனிப்பட்ட விவரங்களை கொண்டு அவர்கள் பாஸ்வேர்டு என்னவாக இருக்கும் என யூகித்துவிட முடியும்.

இதை தடுக்க எளிய வழி இருக்கிறது. பாஸ்வேர்டுக்காக யோசிக்கும் போது உங்களை மறந்து விடுங்கள் ! உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் நெருக்காமானவர்களின் விவரங்களை மனதில் கொள்ளாமல் யோசித்தீர்கள் என்றால் உருவாகும் பாஸ்வேர்டு உங்களோடு பற்றில்லாததாக இருக்கும். அப்போது அது களவாடப்பட முடியாததாகவும் இருக்கும்.

சும்மாயில்லை, தாக்காளர்கள் களவாடி வெளியிட்ட லட்சக்கணக்கான பாஸ்வேர்டுகளை ஆய்வு செய்து இந்த பற்றில்லாத வழியை கண்டுபிடித்துள்ளனர். பகிரங்கமான பயனாளிகளின் பாஸ்வேர்டுகளை பார்க்கும் போது அவற்றில் பளிச்சிடும் பொதுத்தன்மை அடிப்படையில் , பொதுவாக பாஸ்வேர்டு உருவாக்கத்தில் பெரும்பாலானோர் கடைபிடிக்கும் வழிகளை கண்டறிந்துள்ளனர்.

பெர் தோர்சியம் எனும் ஆய்வாளர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் முன்வைக்கும் பாஸ்வேர்டு பொது தன்மைகள் சில ; ஆண்கள் பாஸ்வேர்டு உருவாக்கத்தில் பரவலான வேறுபாட்டை நாடுகின்றனர். பெண்கள் நீளமான பாஸ்வேர்டை நாடுகின்றனர்.

சிவப்பு முடி கொண்ட பெண்கள் மிகச்சிறந்த பாஸ்வேர்டை உருவாக்குகின்றனர். தாடி வளர்த்த தலைகலைந்த ஆண்கள் மோசமான பாஸ்வேர்டுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனர்.

எப்படி இருக்கிறது ஆய்வு !

தெரியுமா உங்களுக்கு?





1. குறுந்தகடு(சி.டி) செயல்படும் விதம்:

சிடிக்கள் என அழைக்கப்படும் காம்பாக்ட் டிஸ்க்குகள் அதில் பதிந்துள்ள தகவல்களை நடு மையத்திலிருந்து படிக்கத் தொடங்கி விளிம்பில் முடிக்கின்றன. இது மியூசிக் ரெகார்டுகளுக்கு எதிரான வழியாகும். மியூசிக் ரெகார்டுகள் விளிம்பிலிருந்து தொடங்கி நடுப்பாகம் செல்கின்றன.


 2. பாராசிடமால் மாத்திரையின் மறுபக்கம்:

மழை, குளிர் காலங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சலினால் உடலின் வெப்ப நிலை சராசரிக்கும் மிக அதிகமாகும் போது, "இழுப்பு' போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.காய்ச்சல் வெப்ப நிலையை உடனடியாகக் குறைக்க, பாராசிட்டமால் உதவுகிறது. ஆனால் 18 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, அடிக்கடி பாராசிட்டமால் கொடுத்தால் ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது என, லண்டனில் நடந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 6 வயது குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராயும் போது, அவர்களுக்கு ஒன்றரை வயதுக்குள் அதிகளவில் பாராசிட்டமால் கொடுத்திருந்தது தெரிய வந்துள்ளது. குழந்தைகள் நல மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, பாராசிட்டமாலைப் பயன் படுத்த வேண்டும். அவர்கள் நிர்ணயித்த அளவு மட்டுமே தர வேண்டும். பெற்றோர்கள் தன்னிச்சையாக பாராசிட்டமாலை குழந்தை களுக்கு தரக்கூடாது.



 3. கைபேசி தொலைந்தால் கண்டுபிடிக்க:

ஒரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். 



4.குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள்:


இந்தியாவில் ஓராண்டில் பிறக்கும் குழந்தைகளில் 2.5 கோடி பேர் ஏதாவது ஒரு குறையுடன் பிறக்கின்றனர். தமிழகத்தில் ஆண்டுக்கு 11.5 லட்சம் குழந்தைகள் எடைக்குறைவு உட்பட பல்வேறு குறைபாடுகளுடன் பிறக்கிறது. இந்தியாவில் 5 சதவிகிதம் பேர் டிஸ்லெக்சியா, ஆட்டிசம் போன்ற அரிய வகையிலான குறைகளுடன் பிறக்கின்றனர்.


5. 'ஆண்டி பயாடிக்’ மாத்திரை ஆபத்து!:

'ஆண்டி பயாடிக்’ மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உடலில் உள்ள `பி காம்ப்ளக்ஸ்’ குறைகிறது. அதைத்தொடர்ந்து வாய் நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. தலைவலியிலும், காய்ச்சலிலும் பல வகைகள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டு, அது எந்த வகை என்று தெரியாமல் ஒரே மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுவது தவறு. இந்த பழக்கம் அதிகமானால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.


6. அழிவின் விளிம்பில் தேசிய விலங்கு புலி:

இந்தியாவில் 1988 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை, தினமும் ஒரு புலி வீதம் எங்கோ ஒரு மூலையில் கொல்லப்பட்டது. இந்த வனவிலங்கு கழகம் ஒருமுறை கூட, கூடி சிந்திக்காததால் இதை தடுக்க முடியவில்லை. இவற்றின் தோல் சீனர்களின் வீடுகளை அலங்கரிக்கிறது. எலும்புகள் சீன மருந்துவத்தில் முக்கிய இடத்தை பெறுகின்றன. சீனர்கள் அதிகம் விலை கொடுப்பதால், இந்தியாவில் புலிகளை கொன்று ஏற்றுமதி செய்வது அதிகரித்தது. இப்படி புலிகளின் எண்ணிக்கை மிக குறைந்து போய் கொண்டிருப்பது, இந்திய அரசின் கவனத்திற்கு வந்தது. பின் போர் கால அடிப்படையில் புலிகளை காப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.

கம்ப்யூட்டர் மேதைக்கு அரச மன்னிப்பு....?



ஒரு வரலாற்று தவறு அரச மன்னிப்பு மூலம் சரி செய்யப்பட்டிருக்கிறது. கணிணி யுகத்தின் முன்னோடியும் , இரண்டாம் உலகபோரில் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை காக்க தனது கணிணி திறமை மூலம் உதவியவருமான ஆலன் டியிரிங் மீதான களங்கம் துடைக்கப்பட்டிருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர் என் தண்டிக்கப்பட்ட டியூரிங்கிற்கு பிரிட்டன் மகாரணியின் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆலன் டியூரிங் கண்ணி யுகத்தின் முன்னோடி. கணிதப்புலி. அந்த காலத்து தாக்காளர். அப்போதே கம்ப்யூட்டர்களை சிந்திக்க வைப்பது பற்றி யோசித்தவர். ஆரம்ப கால கப்யூட்டர்களுக்கான நிரல்களை உருவாக்கியவர். இன்று கம்ப்யூட்டர் , சூப்பர் கம்ப்யூட்டர் என்று எல்லாம் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களுக்காக அவருக்கு உலகம் நன்றி கடன் பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஹிட்லரின் கை ஓங்கியிருந்த இரண்டாம் உலகப்போரின் போது அவரது பங்களிப்பே நேச நாடுகளுக்கு வெற்றியை தேடித்தந்ததோடு ஆயிரக்கணக்கானோரின் உயிர்களையும் காப்பாற்றியது. எனியாக் கம்யூட்டர் மூலம் ஹிட்லர் அனுப்பிய ரகசிய செய்திகளை டியூரிங் இடைமறித்து அவற்றின் சங்கேத குறியீடுகளை உடைத்து புரிய வைத்தார். இதற்காக அவர் பாம்ப் ( Bombe) எனும் பெயரில் கம்ப்யூட்டர் குறியீடுகளை புரிந்து கொள்வதற்கான கம்ப்யூட்டரை உருவாக்கினார்.

டியூரிங் அந்த காலத்திலேயே கம்ப்யூட்டர்களை சிந்திக்க வைத்து செய்றகை மூளையை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இயந்திர அறிவிற்காக அவர் உருவாக்கிய பரிசோதனை  டியூரிங் சோதனை என்று பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. கம்ப்யூட்டர் துறையின் ஈடு இணையில்லாத மேதை என்று கொண்டாடப்படும் டியூரிங் மீது ஒரு களங்கமும் இருந்தது. டியூரிங் ஓரினச்சேர்க்கை பழக்கம் கொண்டிருந்தவர். அவரது காலத்தில் அது குற்றமாக கருதப்பட்டதால் அவர் தண்டிகப்பட்டார். ரசாயணம் மூலம் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டார். 1952 ல் இந்த அவமானம் அவருக்கு நேர்ந்தது. இதைவிட மோசமாக அவர் மேற்கொண்டிருந்த ஆய்வில் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை. இதனால் மனம் உடைந்து 1954 ல் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

டியூரிங் மறைவுக்கு பிறகு கம்ப்யூட்டர் துறை எங்கேயோ வளர்ந்து வந்துவிட்டது. ஆனால் இந்த வளர்ச்சியில் அவரது பங்களிப்பு மகத்தானது . அவரது மேதமையை கொண்டாடி வருபவர்கள் அவர் மீதான களங்கம் துடைக்கப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்து வந்தனர். 2009 ஆம் ஆண்டு டியூரிங் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு மன்னிப்பு வழஙக்ப்பட வேண்டும் எனும் கோரிக்கை இணைய விண்ணப்பமாக முன் வைக்கப்பட்டது. இதற்கு பல்லாயிரக்கனக்கானோர் ஆதரவு தெரிவித்தனர். அப்போது பிரிட்டன் பிரதமராக இருந்த காடன் பிரவுன் , அர்சு சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொண்டு டியூரிங் தண்டிக்கப்பட்டது தவறு என்று தெரிவித்தார். 2011 ம் ஆண்டு டியூடிங்கிறகு மன்னிப்பு வழங்க கோரி மீண்டும் இணையா கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கும் ஆயிரக்கணக்கில் ஆதரவு குவிந்தது.

இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது டியூரிங்கிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் கிறிஸ் கிரேலிங் வேண்டுகோளை ஏற்று முறைப்படி இதற்கான உத்தரவு பிறப்பிக்ப்பட்டுள்ளது. ஒரு மேதை மீதான சரித்திர களங்கம் துடைக்கப்பட்டுள்ளது.

இமெயில் சந்தாவில் இருந்து வெளியேற எளிய வழி...?




கட்டுரைகளையோ , செய்திகளையோ இமெயில் பெற சம்மதம் தெரிவிப்பது சுலபமானது தான். இப்படி இமெயில் வழியே சந்தாதாரவது தேவையானது தான். இமெயிலேயே தேவையான தகவல் வந்துவிடுவதால் தனியே குறிப்பிட்ட அந்த தளங்களுக்கு செல்ல வேண்டியதும் இல்லை. அந்த தளங்களில் புதிய தகவல் அல்லது கட்டுரைகளை தவற விடும் வாய்ப்பும் இல்லை.

இமெயிலில் சந்தாதாரவது சுலபமாகவும் பயனுள்ளதாக இருந்தாலும் சில நேரங்களில் இமெயில்ல் வரும் தகவல்கள் சுமையாகவோ , இடைஞ்சலாகவோ மாறிவிடலாம். திடிரென முகவரி பெட்டியில் மெயில்களாக குவிந்து அவற்றை படிக்க முடியாமல் திண்டாடும் போது இமெயில் சந்தாக்களில் வரும் தகவல்கள் அதிருப்தியை தரலாம்.

ஆனால் நல்ல வேளையாக இமெயிலில் புதிய தகவல்களை பெற சம்மதம் தெரிவிப்பது போலவே, இனி தேவையில்லை என்று சொல்வதும் சுலபமானது தான். இதற்காகவே சந்தா விலக்கல் (அன் சப்ஸ்கிரைப் ) வசதி இருக்கிறது. இமெயில் செய்தியில் எந்த இடத்தில் இந்த வசதிக்கான ஐகான் இருக்கிறது என் பார்த்து கிளிக் செய்தால் மெயில் வரத்து நின்று போகும். இருந்தாலும் பல நேரங்களில் இந்த சந்தா விலக்கல் வசதி எங்கிருக்கிறது என்று தெரியாமலும் திண்டாடலாம். அது மட்டும் அல்லாமால் மெயிலை திறந்து அந்த வசதியை தேர்வு செய்து கிளிக் செய்வதற்கு அலுப்பாக இருக்கலாம். சந்தா சேவையே ஒரு வகையில் சோம்பலுக்கான தீர்வு தானே. அதே சோம்பல் சந்தா வேண்டாம் எனும் வசதியை தேடி கிளிக் செய்யவும் தடையாக இருக்கலாம்.

எது எப்படியோ, இமெயில் சந்தாவில் இருந்து விலகுவதற்கான சுலபமான வழியை ரிமூவ் மீ இணையதளம் வழங்குகிறது. இமெயில் முகவரி பெட்டியை ஒரே கிளிக்கில் தேவையில்லாத மெயில்களில் இருந்து விடுவிக்க வழி செய்வதாக சொல்லும் இந்த தளம், இனியும் வேண்டாம் என நினைக்கும் சந்தாவில் இருந்து விடுபட சுலபமான வழியை முன்வைக்கிறது. அதுவும் எப்படி தெரியுமா? குறிப்பிட்ட அந்த சேவையில் மெயிலை திறக்கமாலேயே ஒரே கிளிக்கில் அதற்கு குட்பை சொல்ல வைக்கிறது. எப்படி என்றால் , முகவரி பெட்டியில் அந்த மெயிலுக்கு அருகிலேயே அதற்கான வசதியை காண்பிக்கப்படுகிறது. அதில் ஒரு கிளிக் ,அவ்வளவு தன இனி அந்த மெயில் வராது.

இமெயில் சந்தாக்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு நிச்சயம் ரிமூவ் மீ பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அதற்கு முன் இதை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

சந்தா விலக்க சேவையுடன் , இமெயில் சர்பார்ப்பு சேவையையும் இந்த தளம் வழங்குகிறது . அதாவது குறிப்பிட்ட இமெயில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து தான் வந்திருக்கிறதா இல்லை ஏதேனும் விளம்பர அல்லது ஏமாற்று மெயிலா என்பதை இது உறுதி செய்கிறது.உதாரணமாக பேஸ்புக்கில் இருந்து ஒரு அப்டேட் வந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த மெயிலுக்கு அருகே அந்த நிறுவன லோகோ தோன்றுவதை பார்த்து பேஸ்புக் மெயில் தான் என உறுதி கொள்ளலாம்.

ரிமூவ் மீ சேவையை வழங்குவது பவர் இன்பாக்ஸ் எனும் நிறுவனம். பவர் இன் பாகஸ் நிறுவங்களின் இமெயில் தகவல்களை மேலும் சிறந்த வழியில் பெற வழி செய்கிறது. கிட்டத்தட்ட இதுவும் இமெயிலுக்கான சந்தா சேவை போல் தான். இமெயில் சந்தா சேவை வழங்கும் ஒரு நிறுவனமே சந்தா விடுபடல்சேவை வழங்குவது அழகான முரண் தான். இது ஒருபுறம் இருக்கட்டும், பவர் இன்பாக்ஸ் சேவையை பயன்படுத்தினால் பேஸ்புக் மறும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகளை உங்கள் இமெயில் முகவரி பெட்டியில் இருந்தே இயக்கலாம். அதாவது , பேஸ்புக் அல்லது டிவிட்டர் சேவைக்கான வசதி மெயிலுக்கு அருகே தனியே தோன்றுகிறது. ஆக மெயிலில் இருந்து விலகிச்செல்லாமலேயே பேஸ்புக்கை அப்டேட்டை சரி பார்க்கலாம்.

இணையதள முகவரி; http://ub.powerinbox.com/removeme/

சீக்கிரம் தூங்கும் குழந்தை ஸ்லிம்மாக இருக்கும்




பொதுவாக குழந்தைகளை இரவில் தூங்க வைப்பதுதான் பெற்றோரின் மிகக் கடினமான பணியாக இருக்கும். இப்போது அதற்கு இன்னும் ஒரு முக்கியக் காரணம் வந்துவிட்டது. அதாவது, இரவில் சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதில்லை என்கிறது ஒரு ஆய்வு முடிவு.

இரவு 7 மணிக்குள் உணவை முடித்துவிட்டு, சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள். அதே சமயம் இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்து, காலையில் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இது எவ்வாறு ஏற்படுகிறது என்றால், இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்தாலும், குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை. அதே சமயம், இரவு உணவு முடிந்த பிறகு அதிக நேரம் கண்விழித்திருக்கும் குழந்தை உறங்கும் முன்பு ஏற்படும் பசி காரணமாக ஏதேனும் ஒரு நொறுக்குத் தீணியை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் காலையில் தாமதமாக எழுவதால், பகல் பொழுதில் இவர்கள் முழித்திருக்கும் நேரம் குறைவதால் விளையாடும் நேரமும் குறைகிறது. இதனால் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதாவது, சீக்கிரம் தூங்கச் சென்று, சீக்கிரமாக எழுந்திருக்கும் குழந்தைகளுக்கும், தாமதமாக தூங்கச் சென்று காலையில் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளும் ஒரே அளவில்தான் தூங்குகிறார்கள் என்றாலும், தாமதமாகத் தூங்கச் செல்லும் குழந்தைகளின் உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் உடல் பருமனுக்குக் காரணமாக அமைகிறது.

மேலும், மிகக் குறைவான உறக்கம் உள்ள குழந்தைகளுக்கு ஏராளமான உடல் பிரச்சினைகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

வீட்டுச் சூழல் தான் குழந்தைகளின் உறக்கத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது. பெற்றோர் சரியான நேரத்தில் தூங்கி, அதிகாலையில் எழும் பழக்கத்தைக் கடைபிடித்தால் குழந்தைகளும் சரியான நேரத்தில் தூங்குவார்கள். எனவே குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு உறக்கமும் இன்றியமையாதது என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

நகைச்சுவை எழுத்தாளர் கடுகு....?




புத்தாண்டு என்றதும் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காலண்டர். அடுத்தது டைரி.. டைரி எழுதும் பழக்கம் இருப்போரும், சில வரவு செலவு கணக்குகளை எழுதுவோரும் டைரியை வாங்கி வைத்துக் கொள்வார்கள். இல்லை என்றால், அலுவலகத்திலோ, நண்பர்களோ டயரியை கொடுப்பார்கள் என்று காத்திருப்பார்கள்.

எல்லோரும் டைரி எழுதினால், இங்கே நகைச்சுவை எழுத்தாளர் கடுகு, டைரி பற்றி ஒரு நகைச்சுவை கட்டுரையே எழுதிவிட்டார்.

டைரியை பற்றி  “கமலாவும்… நானும்’ என்ற நூலில் “டைரியும் நானும்’ என்ற கட்டுரையில் நகைச்சுவை எழுத்தாளர் “கடுகு’ எழுதிய ஒரு சிலவற்றை காணலாம்.

எனக்கு டயரி எழுதும் பழக்கம் கிடையாது. அதற்கு முதல் காரணம் சோம்பேறித்தனம். இரண்டாவது, நாம் மறக்க விரும்பும் விஷயங்களை எழுதித் தொலைப்போம். எப்போதாவது டைரியைப் புரட்டினால் அதுதான் முதலில் கண்ணில் படும்! அந்த விஷயத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதபடி பாடாய்ப்படுத்தும்!

என்னைக் கேட்டால் டைரிகளில் 80 சதவீதம் புதுக்கருக்கு அழியாமல் இன்னும் பல வருஷங்கள் பலர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும். பத்து சதவீத டைரிகள் முதல் இரண்டு பக்கம் மட்டும் எழுதப்பட்டு (இன்று புத்தாண்டு. புது வருஷம் பிறந்தது!) இருக்கும். மீதி பத்து சதவீத டைரிகள் பால் கணக்கு, தயிர்க் கணக்கு, நோட்டுப் புத்தகமாக உபயோகப்படுத்தப்படும். எல்லாருமா அனந்தரங்கம் பிள்ளை மாதிரியோ, சாமுவேல் பீப்ஸ் மாதிரியோ டைரி எழுத முடியும்?

சாமுவேல் பீப்ஸ் டைரி சுமார் ஒன்பதரை வருடக் குறிப்புகள். கிட்டத்தட்ட 15 லட்சம் வார்த்தைகள்! தனது தனிப்பட்ட எண்ணங்களை யாரும் படித்துவிடக் கூடாது என்று கருதி “டேக்கி கிராஃபி’ என்ற ஏறக்குறைய உலகமே மறந்துவிட்ட சுருக்கெழுத்து முறையில் எழுதியிருந்தார். அப்படியும் 100 வருஷங்களுக்குப் பிறகு பெரும் முயற்சி எடுத்து அதையும் படித்துவிட்டார்கள். எனக்கு டேக்கி கிராஃபி தெரியாது. நான் டைரி எழுதாததற்கு அதுவும் ஒரு காரணம்.

இன்னொரு அல்ப காரணமும் உண்டு. உதாரணமாக டைரியில் குப்புசாமிக்கு இன்று 5 ரூபாய் கடன் கொடுத்தேன் என்று எழுதியிருந்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பத்து வருஷம் கழித்து இதைப் பார்த்தால் யார் இந்தக் குப்புசாமி? அவருக்கு எதற்கு 5 ரூபாய் கடன் கொடுத்தேன்? உண்மையிலேயே வெறும் 5 ரூபாய்தானா அல்லது ஐயாயிரம் என்பதைச் சுருக்கி “ஐந்து’ என்று எழுதினேனா? என்பது போன்ற பல கேள்விகளால் தலையைப் பிய்த்துக் கொள்ள நேரிடும்!

இவையெல்லாம் போகட்டும் என்று விட்டுவிட்டால்கூட, கொடுத்த பணத்தை குப்புசாமி திருப்பிக் கொடுத்தானா, மறந்து விட்டோமா? பணம் கோவிந்தாதானா? என்று பல கேள்விகள் மண்டையைக் குடையும்! எதற்கு இத்தனை தொல்லை? டைரி எழுதாவிட்டால் ஒரு வம்பும் இல்லையே! அதனால்தான் நான் டைரி எழுதுவதில்லை! இது ஒரு சமூக சேவை என்று உங்களில் சிலர் சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும்! என முடித்திருந்தார்.

ஜாவாஸ்க்ரிப்ட் மாயாஜாலம் உங்களுக்காக..




n4ʞƃıuıuɐʞ sı sıɥʇ ıɥ இப்படி தலைகீழாக பேர் அடிச்சி பார்க்கனுமா? வாங்க!
பயப்படாதீங்க! பயப்படாதீங்க! உங்க கம்ப்யூட்டரில் வைரஸ் எதுவும் வந்து விடவில்லை.

எல்லாம் ஜாவாஸ்க்ரிப்ட் மாயாஜாலம்.

இந்த வெப்சைட் http://www.sevenwires.com/play/UpsideDownLetters.html போங்க. ஆங்கிலத்தில் நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்களை தலைகீழாக மாற்றி கொடுக்கும்.

Cut and Paste பண்ணிக்குங்க.

இதப்படிங்க முதலில்.....!




பி.எஸ்சி. ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி பட்டப் படிப்பு 100% வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் இந்திய உணவு வகைகளுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு அதிகம் இருப்பதால் வெளி நாடுகளில் வேலைவாய்ப்பு நிறையவே உண்டு. இத்

துறைக்கு ஆங்கில மொழித்திறன் அவசியம். கேட்டரிங் படிக்க விரும்புபவர்கள் அவசரப்பட்டு, 10-ம் வகுப்பு முடித்ததும் ஹோட்டல் டிப்ளமோ படிப்பதைவிட பிளஸ் 2 முடித்து, பி.எஸ்சி. ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி படிப்பது சிறந்தது.

தவிர, பி.எஸ்சி. ஆஸ்பிட்டாலிட்டி, ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் என பல்வேறு பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் ஜெனரல் ஆபரேஷன் படிப்பதன் மூலம் நட்சத்திர ஹோட்டலை நிர்வகிக்கலாம். ஃப்ரன்ட் ஆபீஸ் படித்தால் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றலாம்.

 ஃபுட் பேவரேஜ் படிப்பதன் மூலம் உணவுத் தயாரிப்பு, தரக்கட்டுப்பாடு தொடங்கி விநியோகம் வரை நிர்வகிக்கலாம். ஹவுஸ் கீப்பிங் படிப்பவர்கள், ஹோட்டல் பராமரிப்புப் பணிகளை நிர்வகிக்கலாம். சேல்ஸ் அண்டு மார்க்கெட்டிங் படிப்பவர்கள், ஹோட்டல் வளர்ச்சிப் பணிகளை நிர்வகிக்கலாம்.

மணிப்பாலில் வெல்கம் குரூப் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட்டில் 4 ஆண்டு பட்டப் படிப்பு உள்ளது. இதற்கு நுழைவுத் தேர்வு உண்டு. தவிர, மாநிலத்தின் ஒவ்வொரு தலைநகரத்திலும் நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. சென்னை தரமணியில் இந் நிறுவனம் இயங்குகிறது. இங்கு சேர அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு உண்டு.

என்.சி.ஹெச்.என்.சி.டி - (ஜே.இ.இ.) இணை நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 5-ம் தேதி முதல் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு 2014, ஏப்ரல் 7-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 26-ம் தேதி தேர்வு நடக்கிறது. www. nchnct.org என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வு கணிதம், ரீசனிங் அண்டு லாஜிக்கல், பொது அறிவு ஆகிய பாடங்களில் தலா 30 மதிப்பெண்; ஆங்கிலம் - 60 மதிப்பெண், ஆக்டிடியூட் ஃபார் சர்வீஸ் செக்டார் - 50 மதிப்பெண் என மொத்தம் 200 மதிப்பெண் கொண்டது. பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பம் ரூ. 800; எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பம் ரூ. 400. சென்னையில் இத்தேர்வு நடக்கும்.

2013 இல் இலங்கை : நிகழ்வுகள், அதிர்வுகள், மாற்றங்களின் தொகுப்பு

2013 இல் இலங்கை : நிகழ்வுகள், அதிர்வுகள், மாற்றங்களின் தொகுப்பு





 ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை, பொதுநலவாய மாநாடுகள், வடக்கு மாகாண தேர்தல், இந்து- இஸ்லாமிய மத மார்க்க ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் என்று இலங்கையின் அரசியல்- ஊடக தளத்தில் தொடர்ந்தும் பரபரப்பும், அதிர்வுகளும், மாற்றங்களும் இடம்பெற்றே வந்திருந்தது. 2013ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் மீது பாரிய அழுத்தங்களை வழங்கியது. அது, சர்வதேச ரீதியில் இதற்கு முன்னர் எதிர்கொள்ளாத அழுத்தமாக இருந்தது. இலங்கை ஊடக பரப்பில் அதிகம் பேசப்பட்ட விடயங்களின் செய்தி தொகுப்பு இது. 4tamilmedia-வுக்காக இலங்கையிலிருந்து சிறப்பு செய்தியாளர்களினால் தொகுக்கப்பட்டது.
ஜனவரி: 09


ரிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய திருகோணமலையின் மூதூரைச் சேர்ந்த ரிஷானா நபீக் கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டு அந்நாட்டு நீதித்துறையினால் சிரச்சேதம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் குறித்து 4தமிழ்மீடியாவில் வெளிவந்த சிறப்புப் பதிவு : 'ரிஷானாவை கொன்று எழுதிய தீர்ப்பு : கடவுளிடம் சிரிக்கிறது!'

ஜனவரி: 13

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம்

ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பாராளுமன்ற குழுவின் விசாரணைகளை எதிர்கொண்டிருந்த பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்குவதற்காக பத்திரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டார்.
பதிவு : எமது அரசியல் : எமது உரிமை 09

ஜனவரி: 15

புதிய நீதியரசராக மொஹான் பீரிஸ் நியமனம்

பிரதம நீதியரசராக பணியாற்றிய ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவான் மொஹான் பீரிஸ் இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார். சத்தியப்பிரமாணமும் இடம்பெற்றது.

பெப்ரவரி: 04

இலங்கையின் 65வது சுதந்திர தினம்

சுதந்திரத்தை உண்மையாக அர்த்தப்படுத்தும் வகையில் நாடு அபிவிருத்திப் பாதையில் காலடியெடுத்து வைத்துள்ளது என்று தன்னுடைய சுதந்திர தின உரையின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பெப்ரவரி: 12

இலங்கை மீது ஐக்கிய நாடுகள் குற்றச்சாட்டு

இறுதி மோதல்களின் போது பொதுமக்கள் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் இலங்கை நீதியான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வெளியிட்ட அறிக்கையொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டது.

பெப்ரவரி: 19

பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக சனல் 4 ஆதாரங்களை வெளியிட்டது

தமிழீழ விடுதலைப் புலிகளின் இளைய மகன் பலாச்சந்திரன் இறுதி மோதல்களின் போது இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாக சனல் 4 ஆதார படங்களை வெளியிட்டது. (அதனை இலங்கை அரசு உடனடியாக நிராகரித்தது)

மார்ச்: 10

ஹலால் தரப்படுத்தல் நிறுத்தம்
பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கையில் (இஸ்லாமிய சட்டங்களுக்கு அமைய உணவுகளை தரப்படுத்தப்படும்) ஹலால் முறையை தடை செய்ய வேண்டும் என்ற கோரி போராட்டங்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளையடுத்து உள்ளுரில் இனி ஹலால் தரப்படுத்தல் கிடையாது என்று முஸ்லிம் அமைப்புக்கள் அறிவித்தன.

மார்ச்: 18

மத்தள சர்வதேச விமான நிலையம் திறப்பு
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அம்பந்தோட்டையின் மத்தளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

மார்ச்: 21


ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் வருடாந்த மார்ச் மாத கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும், எதிராக 13 நாடுகளும் வாக்களித்தன. (இந்தியா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது)

ஏப்ரல்: 09

இலங்கை தமிழக சினிமாக்களுக்கு தடை வேண்டும்: ராவண சக்தி
இலங்கையில் தமிழகத்திலிருந்து வெளிவரும் சினிமா படங்கள் வெளியிடக்கூடாது என்று ராவண சக்தி என்கிற பௌத்த அடிப்படைவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

ஏப்ரல்: 10

இலங்கையின் ஆயுத மோதல்களுக்கு இந்தியா பொறுப்பு: கோத்தபாய ராஜபக்ஷ

இலங்கையில் 30 வருடங்களாக ஆயுத மோதல்கள் தொடர்ந்தமைக்கு இந்தியாவே பொறுப்பு என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டார். அந்தக் கருத்தை இந்திய மத்திய அமைச்சர் ஒருவர் நிகாரித்திருந்தார்.

ஏப்ரல்: 13

உதயன் அலுவலகம் எரிப்பு

யாழ்ப்பாணத்தின் முன்னணி பத்திரிகையான உதயனின் பிரதான அலுவலகம் இனந்தெரியாத ஆயுத குழுவொன்றினால் எரியூட்டப்பட்டது.

ஏப்ரல்: 22

வலிகாமத்தில் 6000 ஏக்கர் காணி சுவீகரிப்புக்கு அரசு பணிப்பு

நீதிமன்ற உத்தரவுகளை மீறி யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியில் இராணுவ தேவைகளுக்காக 6000 ஏக்கருக்கும் அதிகமான பொதுமக்களின் காணிகளை அபகரிப்பதற்கான ஆணையை இலங்கை அரசு வழங்கியது. அதனைத் தொடர்ந்தும் மக்களின் வீடுகள், கோவிகள் அழிப்பு அங்கு தொடர்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மே: 10

அசாத் சாலி விடுதலை

ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான கருத்துக்களை முன்வைத்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பொலிஸாரல் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் கொழும்பு மாநாகர சபையின் பிரதி மேயரும், எதிர்த்தரப்பு அரசியல்வாதியுமான அசாத் சாலி 8 நாட்களின் பின் விடுதலையானர்.

மே: 29

பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன மறைவு

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வைத்தியருமான ஜயலத் ஜயவர்த்தன உடல் நலக் குறைபாட்டினால் மரணமடைந்தார்.

ஜூன்: 08

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பிரான்ஷில் வாழ்கிறார்(?) சர்ச்சை

மோதல்கள் உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியில் கொழும்பில் காணாமற்போயிருந்த முன்னணி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தலையை மொட்டையடித்துக் கொண்டு பிரான்ஸில் மறைந்து வாழ்கிறார் என்று அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார். அத்தோடு, நீதிமன்ற விசாரணைகளையும் எதிர்கொண்டு, இறுதியில் அப்படியில்லை என்று கூறி சர்ச்சைகளை முடித்து வைத்தார்.

ஜூன்: 09

13வது திருத்த சட்டத்தின் மீதான திருத்தங்களுக்கான அரசின் முயற்சி

இலங்கையின் அரசியலமைப்பிலுள்ள 13வது திருத்த சட்டத்தில் திருத்தங்களை செய்யும் அவசரம் அரசாங்கத்தின் காணப்பட்டது. அது, பலத்த சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது. நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமே அதை வெளிப்படையாக அறிவித்திருந்தார். பின்னர், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தங்களின் அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டது.

ஜூன்: 24

வடக்கு மாகாண சபைத் தேர்தல் திகதி அறிவிப்பு

வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் பெரும்பாலும் செப்டம்பர் 21 அல்லது 28ஆம் திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார். இறுதியில் செப்டம்பர் 21ஆத் திகதியே தேர்தல் நடைபெற்றது.

ஜூலை: 15

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை த.தே.கூ அறிவித்தது

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பொது முதவமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நீண்ட இழுபறிகளுக்குப் பின், கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் அதிகாரபூர்வமான அறிவித்தார்.

ஜூலை: 24

ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்துடன் இணைவு

ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்தார். பின்னர் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு அதில் வெற்றியும் பெற்றிருந்தார்.

ஜூலை: 25

வடக்கு உள்ளிட்ட 3 மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்புமனுக்கள் தாக்கல் ஆரம்பித்தது
 
ஆகஸ்ட்: 01

வெலிவேரிய வன்முறை: இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் மூவர் பலி

கம்பஹா மாவட்டம் வெலிவேரிய பகுதியில் தமது குடிநீர் உரிமையைக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டது. இதன்போது, மூவர் கொல்லப்பட்டதுடன், 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

ஆகஸ்ட்: 13

மஹிந்த ராஜபக்ஷ சிங்கள கடும்போக்குவாதி: லீ குவான் யூ விமர்சனம்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள கடும்போக்கு எண்ணங்களைக் கொண்டவர் என்று சிங்கப்பூரின் தந்தையும், அந்நாட்டின் முதல் பிரதமருமான லீ குவான் யூ விமர்சனத்தை முன்வைத்தமை ஊடகங்களில் பரவலாக கவனம் பெற்றிருந்தது.

ஆகஸ்ட்: 25

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வருகை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தார். மோதல்கள் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை நேரடியாக பார்வையிடும் நோக்கில் வந்த அவர், இதன்போது அரசாங்க- எதிர்க்கட்சி அரசியல்வாதிகளையும் சந்தித்து பேசினார்.

ஆகஸ்ட்: 31

இலங்கை மீது சர்வதேச விசாரணைகள் அவசியம்; நவநீதம்பிள்ளை அறிவிப்பு

இலங்கைக்கான தனது பயண முடிவின் போது நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், இறுதி மோதல்களின் போது என்ன நடந்தது என்பது பற்றி நம்பிக்கைக்குரிய உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படாத பட்சத்தில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளது என்று அறிவித்தார்.

செப்டம்பர்: 02

நவநீதம்பிள்ளை வெளியிட்ட கருத்துக்கள் பக்கச்சார்பானவை; அரசாங்கம் நிராகரிப்பு

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பயணத்தின் இறுதியின் போது இலங்கை தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் பக்கச்சார்பானவை என்று தெரிவித்து வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவற்றை நிராகரித்தார்.

செப்டம்பர்: 07

காணாமற்போனவர்கள்; கொல்லப்பட்டவர்களே: சரத் பொன்சேகா அறிவிப்பு

இறுதி மோதல்களின்போது காணாமற்போனவர்கள் என்று யாரையும் அடையாளப்படுத்த முடியாது. அப்படி காணாமற்போனவர்கள் என்று கருதப்பட்டால், அவர்கள் கொல்லப்பட்டவர்கள் என்றே உணரப்பட வேண்டும் என்று இறுதி மோதற்காலங்களில் இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர்: 09


சமூக செயற்பாட்டாளர் சுனிலா அபேசேகர மறைவு

சர்வதேச விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரான சுனிலா அபேசேகர காலமானார். சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பில் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் அறிவித்தனர்.

செப்டம்பர்: 15


‘யாழ்தேவி’ கிளிநொச்சி சென்றது

கிளிநொச்சிக்கான யாழ்தேவி ரயிலின் உத்தியோகபூர்வ பயணத்தை வவுனியாவின் ஓமந்தையிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். அத்தோடு, யாழ்தேவியின் கிளிநொச்சிக்கான முதற்பயணியாக தன்னை பதிவு செய்து கொண்டு பயணத்தையும் மேற்கொண்டார்.

செப்டம்பர்: 21

வடக்கு மாகாண சபைக்கான தேர்தல்; 80 வீத வாக்குப் பதிவு

மோதல்கள் முடிவுக்கு வந்து, வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்ட பின்னர் வடக்கு மாகாண சபை தன்னுடைய முதலாவது தேர்தலை எதிர்கொண்டது. வடக்கில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு 80 வீதத்துக்கும் அண்மித்த வாக்குகள் பதிவாகின.

செப்டம்பர்: 22

வடக்கு மாகாண சபையை 2/3 பெரும்பான்மையோடு த.தே.கூ கைப்பற்றியது

வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகுளில் 80 வீதத்துக்கும் அண்மித்த அளவில் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருபெற்றி பெற்றது. சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்பது உறுதியானது.

ஒக்டோபர்: 07


வடக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்பு

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசரான சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார்.

ஒக்டோபர்: 08

இந்திய வெளிநாட்டமைச்சர் சல்மான் குர்ஷித் யாழ் விஜயம்

இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்ட இந்திய வெளிநாட்டு அமைச்சர் சல்மான் குர்ஷித் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து பேசினார்.

ஒக்டோபர்: 14

பயங்கரவாத செயற்பாடுகளை அடக்குவது மனித உரிமை மீறல் அல்ல; பிரதம நீதியரசர் அறிவிப்பு

பயங்கரவாத செயற்பாடுகளை அடக்கும் போது மரணங்கள் நிகழ்வதனை தவிர்க்க முடியாது. அப்படியான சந்தர்ப்பங்களை மனித உரிமை மீறல் என்று அர்த்தப்படுத்த வேண்டாம் என்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தான் வழங்கிய தீர்பொன்றில் தெரிவித்தார்.

நவம்பர்: 10

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2013; இணை அமர்வுகள் ஆரம்பம்

இலங்கையில் இம்முறை நடைபெறும் 23வது பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் ஆரம்ப வைபவம் அம்பாந்தோட்டையின் ஆரம்பித்தது.

நவம்பர்: 11


‘சனல் 4’ குழு இலங்கை வருகை

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் செய்தி சேகரிப்பு உள்ளிட்ட ஊடகப் பணிகளில் ஈடுபடுவதற்காக கெலம் மக்ரே தலைமையிலான பிரித்தானியாவின் சனல் 4  தொலைக்காட்சி ஊடகவியலாளர் குழு இலங்கை வந்தது.

நவம்பர்: 15

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கிடையிலான மாநாடு கொழும்பில் ஆரம்பம்

23வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் பிரதான அமர்வுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வரவேற்புரையுடன் ஆரம்பித்தது. பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் 29 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் புறத்தணித்தார்.


பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் யாழ் விஜயம்

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்து பேசினார்.

நவம்பர்: 16

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை: டேவிட் கமரூன் எச்சரிக்கை

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் இலங்கை நடத்த வேண்டும். இல்லாத பட்சத்தில் சர்வதேச விசாரணைகளை எதி்ர்கொள்ள வேண்டி வரும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் எச்சரித்தார்.

நவம்பர்: 17


பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2013: கொழும்பு பிரகடனத்துடன் நிறைவு

இலங்கையின் தலைநகர் கொழும்பில் நவம்பர் 10ஆம் திகதி முதல் நடைபெற்றுவந்த 23வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடுகள் கொழும்பு பிரகாடன வெளியீட்டுடன் நிறைவுக்கு வந்தது.
இச்சம்பவம் குறித்து 4தமிழ்மீடியாவில் வெளிவந்த சிறப்புப் பதிவு : பொதுநலவாய மாநாடு 2013: இலங்கையை பொறுப்புக்கூற பணித்த களம்!
நவம்பர்: 21

2014ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்பித்தார். அதனை, ஐ.தே.க புறக்கணித்தது.

நவம்பர்: 22

நடிகரும், கவிஞருமான வ.ஐ.ச.ஜெயபாலன் மாங்குளத்தில் கைது

வீசா விதிமுறைகளை மீறினால் என்கிற குற்றச்சாட்டில் ஈழத்தின் கவிஞரும், தமிழ்த் திரைப்பட நடிகருமான வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கை இராணுவத்தினரால் மாங்குளத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். சில நாட்கள் விசாரணையின் பின் அவர் நாடு கடத்தப்பட்டார்.

டிசம்பர்: 03

ஐ.நா.களின் விசேட பிரதிநிதி சலோக பெயானி யாழ் விஜயம்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் உள்நாட்டில் இடம்பெயர்தோரின் நலன்சார் விசேட பிரதிநிதி சலோக பெயானி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டார். அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்துபேசினார். இறுதி மோதல்களமான முள்ளிவாய்க்காலையும் பார்வையிட்டார்.

டிசம்பர்: 11

இலங்கையில் 2009இல் இடம்பெற்றது ‘மனித படுகொலைகளே’:  நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்றது, மனித படுகொலைகளே என்று உரோம் நகரை தலைமையகமாகக் கொண்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தன்னுடைய தீர்ப்பொன்றில் தெரிவித்தது.

டிசம்பர்: 14

இன, மத அடையாளங்களை பிரதிபலிக்கும் அடையாள அட்டைகளுக்கு அனுமதி மறுப்பு

இன, மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான படங்களுடன் யாரும் எதிர்காலத்தில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது. அவ்வாறு விண்ணப்பித்தாலும், அவை நிராகரிக்கப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் அறிவுறுத்தியது.

டிசம்பர்: 20

2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்; 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றியது.

டிசம்பர்: 25


கிளிநொச்சியில் இந்திய ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் கைது

வீசா விதிமுறைகளை மீறிய குற்றங்களுக்கான இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் கிளிநொச்சியில் வைத்து இராணுவ சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணைகளை கொழும்பில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட பின் (டிசம்பர் 28) நாடு கடத்தப்பட்டார்.